Wednesday, March 19, 2008

கண்டுபிடிப்புக்கள்

நியூட்ரனைக் கண்டுபிடித்தவர் – சேட் விக் ( Chad Wick )
X-ray வைக் கண்டுபிடித்தவர் – வில்லியம் ரோன்ஜன் (William Roentgen)
ரேடியோ அலைகளைக் கண்டுபிடித்தவர் – மார்க்கோனி ( Marconi )
டைனமைட்டைக் கண்டுபிடித்தவர் – ஆல்பிரட் நோபள் ( Alp had Noble ) பால் பொயின்ட் ( Ball Point ) பேனாவை கண்டுபிடித்தவர் – லாய்ட் ( Laid )
பவுன்டைன் ( Fountain Pen ) பேனாவை கண்டுபிடித்தவர் -- வாட்டர்மேன் ( Watermen )
நீர் மூழ்கிக்கப்பலைக் ( Submarine ) கண்டுபிடித்தவர் – புஷ்வெல் ( Bushel )
பென்சிலினை கண்டுபிடித்தவர் – பிளமிங் ( Fleming )
கைத்துப்பாக்கியை கண்டுபிடித்தவர் – கோல்ட்வே ( Koldewey )
சேப்டி ரேசரை ( Safety Razor ) கண்டுபிடித்தவர் – ஜில்லெட் ( Gilled )
வெறிநாய்க் கடிக்கு மருந்து கண்டுபிடித்தவர் – லூயி பாஸ்டியர் ( lure pastor )
ஹோமியோபதி மருத்துவ முறையைக் கண்டுபிடித்தவர் -- ஹான்மேன் ( Hannmann )
தெர்மாமீட்டரை கண்டுபிடித்தவர் – பாரன்ஹீட் ( Fahrenheit )
ரேடியமை கண்டுபிடித்தவர் – மேரி கியூரி ( Marry Query )
தொலைக்காட்சியை கண்டுபிடித்தவர் – J.L. பெயர்ட் ( J.L. Paired )
ஹெலிகொப்டரை கண்டுபிடித்தவர் – புரோக் கெப்ட் ( Pork Kept )

மொழிகள்

அயர்லாந்து -ஐரிஷ், ஆங்கிலம்
அவுஸ்திரேலியா -ஆங்கிலம்
அல்ஜீரியா -அரபி, பிரென்ச்
ஆப்கானிஸ்தான் -பெர்சியன், புஷ்து
ஆர்ஜென்டீனா -ஸ்பானிஷ்
இந்தியா -ஹிந்தி
இலங்கை -சிங்களம், தமிழ்
இத்தாலி -இதாலியன்
இங்கிலாந்து -ஆங்கிலம்
இந்தோனேஷியா -இந்தோனேஷியன்
ஈராக் -அரபி, குர்திஷ்
ஈரான் -பேர்ஷியன்
உகண்டா -ஸ்வாஹிலி, லுகாண்டா
உஸ்பெகிஸ்தான் -உஸ்பெக், ரஷ்யன்
உக்ரெய்ன் -உக்ரேனியன்
மலேஷியா -மலாய்
மியன்மார் (பர்மா) -பர்மிஸ்
மெக்ஸிக்கோ -ஸ்பேனிஷ்
மொரீஷியஸ் -பிரென்ச், கிரியோல், ஹிந்துஸ்தானி
சவூதி அரேபியா -அரபி,
சிங்கப்பூர் -மலாய், சைனீஸ்
சிரியா -அரபி
சிலி -ஸ்பானிஷ்
சீனா -சைனீஸ்
சுவீடன் -சுவீதிஸ்
சுவிற்சர்லாந்து -ஜெர்மன், பிரென்ச்
ஜப்பான் -ஜபானிஸ்
ஜிம்பாப்வே -ஷோனா, ஆங்கிலம்
ஜெர்மன் -ஜெர்மன்
கனடா -ஆங்கிலம், பிரென்ச்
கஸகஸ்தான் -கஸக்
கிரீஸ் -கிரீக்
கியூபா -ஸ்பானிஷ்
குவைத் -அரபி
கொங்கோ -பிரென்ச், ஸ்வாஹிலி
துருக்கி -துர்க்கிஷ்
தென் ஆபிரிக்கா -ஆங்கிலம். ஆபிரிக்கான்ஸ்
தென் கொரியா -கொரியன்
பல்கேரியா -பல்கேரியன், டர்கிஷ்
பங்களாதேஷ் -பங்ளா
பாகிஸ்தான் -உருது,
பிலிப்பைன்ஸ் -பிலிப்பினோ (தகலோக்), ஆங்கிலம், ஸ்பேனிஷ்
பிரான்ஸ் -பிரென்ச்
பிரேஸில் -போர்த்துகியூஸ்
போலந்து -போலீஷ்
நியூஸிலாந்து -ஆங்கிலம்
நைஜீரியா -இபோ, ஹொவ்ஸா
நேபாள் -நேபாளி
நோர்வே -நோர்வேஜியன்
ரஷ்யா -ரஷ்யன்
ருமேனியா -ருமேனியன், ஹங்கேரியன், ஜெர்மன்
வியட்நாம் -வியட்நாமீஸ், பிரென்ச், ஆங்கிலம்
வெனிசுலா -ஸ்பானிஷ்
எகிப்து -அரபி,
ஓமான் -அரபி
லிபியா -அரபி
ஸ்பெய்ன் -ஸ்பானிஷ்

பெயர்களின் விரிவாக்கங்கள்

AIR - All India Radio
ABM - Anti-Ballistic Missile
ABC - American Broadcasting Corporation
AH - Anno Hijiri
ASEAN - Association of South East Asian Nations
BARC - Bhaba Atomic Research Centre
BBC - British Broadcasting Corporation
BHELL - Bharath Heavy Electricals Ltd.
B.Pharm - Bachelor of Pharmacy
CBI - Central Bereau of Investigation (India)
CIA - Central Intelligence Agency (America)
COFEPOSA - Conservation of Foreign Exchange and Prevention of Smuggling Act.
DIG - Deputy Inspector General
ESCAP - Economic and Social Commission for Asia and the Pacific
FERA - Foreign Exchange Regulation Act.
GATT - General Agreement on Tarrifs and Trade
IAAI - International Airports Authority of India Ltd.
IATA - International Air Transport Association
INTERPOL - International Polite
ISRO - Indian Space Research Organization
MBA - Master in Business Administration
NATO - North Atlantic Treaty Organization
UPSC - Union Public Service Commission
USAID - United States Agency for International Development
ZIP - Zonal Improvement Plan

மிதக்கும் நகரம்


எதைப் பார்க்கத் தவறினாலும் வெனிஸ் நகரைப் பார்க்கத் தவறவே கூடாது. என்று பெறுமையோடு சிலர் கூறுவர். ஏனென்றால் அது ஓர் அசாதாரன நகரம்! அதன் அமைப்பு அப்படி உள்ளது!வெனிஸ்! இத்தாலி நாட்டிற்கு மகுடமாய் விளங்குகிறது. அது நீரின் மேல் கட்டப்பட்டுள்ளது போன்ற பிரமையை உண்டு பண்ணுகிறது. நூறு தீவுகளின் மேல் அந்த அழகிய நகரம் நிற்கிறது. நம்மூரில் பஸ் ஓடுவது போல, மொத்தம் 177 வாய்க்கால்களில் நீராவிப் படகுகள் இங்குமங்கும் பறந்துகொண்டிருக்கும். ஏனென்றால், அங்கே பஸ்ஸில் செல்ல முடியாது. சுற்றிலும் நீர் சூழ்ந்திருக்கும்போது, பஸ்ஸிலோ வேறு வாகனங்களிலோ எவ்வாறு செல்ல முடியும்? ஒரு பகுதியிலிருந்து இன்னொறு பகுதிக்கு நீராவிப் படகில்தான் சென்று வர வேண்டும்.வெனிஸ் நகரில் கண்டு வியப்பதற்கும் கண்டு களிப்பதற்கும் பல இடங்கள் உள்ளன. அங்கு புராதனப் பெருமையைப் பறைசாற்றும் கலைவண்ணம் மிகுந்த அரண்மனை உள்ளது. ஒன்பதாம் நூற்றாண்டில் கலையம்சத்துடன் கட்டப்பட்ட புனித மார்க் தேவாலயத் தோற்றத்தை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். சலவைக்கல் சுவர்களால் கட்டப்பட்டுள்ள இந்தத் தேவாலயம் உலகிலேயே சிறந்தது எனக் கருதப்படுகிறது. இங்கு மாட மாளிகைகள் ஏராளம், ஏராளம்! வியாபார வேந்தர்கள் அரண்மனை போன்ற மாளிகைகளில் வாழ்கின்றனர்.இந்த அழகிய நகரின் நடுவிலே நாயகமாய் அமைந்து இருக்கிறது, புனித மார்க் சதுக்கம். வியத்தகு கலை வண்ணத்துடன் கட்டப்பட்டுள்ள தேவாலயம் கம்பீரமாகவும் கலாதேவியின் பிரதிநிதியாகவும், எழில் கூடி நிற்கின்ற காட்சியை வேறு எங்குமே காண முடியாது!இத்தனைச் சிறப்பம்சங்களுடன் விளங்கும் வெனிஸ் நகரம், ஆண்டு ஒன்றுக்கு 5 மில்லி மீட்டர் (கால் அங்குலம்) வீதம் நீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறது.

ஈபில் கோபுரம்


அலெக்சாண்டர் குஸ்தவ் ஈஃபில் என்னும் கட்டடக்கலை நிபுணர், தம் பெயர் நிலைத்திருக்கும் வண்ணம் ஒரு கோபுரம் நிறுவினார். கலைவண்ணம் மிகுந்த அக்கோபுரந்தான் ஈஃபில் டவர்.பிரெஞ்சு நாட்டின் தலைநகர், பாரிஸ் அந்நகருக்கு அருகே சாமப் த மார்ஸ் என்னுமிடமுள்ளது. அங்குதான் விண்ணை முட்டிக்கொண்டு கம்பீரமாய் நிற்கிறது இந்தக் கோபுரம்.இக் கோபுரத்தின் உயரம் 984 சதுர அடி (300 மீட்டர்கள்), அடித்தளம் 530 சதுரஅடிகள் (30 சதுர மீட்டர்கள்). வெறும் இரும்பு, உருக்கு ஆகியவற்றால் உருவானது, இந்தப் பிரமாண்டமான கோபுரம்.இக் கோபுரம் 1889ம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது 30 அடி கனமுள்ள இரும்புச் சட்டங்களும், பலகைகளும் கொண்டு கட்டப்பட்டது. இதற்குச் செலவான தொகை ஒரு மில்லியன் டொலருக்கு மேல்! அதுவும் அந்தக் காலத்தில்! இந்தத் தொகையைச் சில வருடங்களிலேயே சம்பாதித்துவிட்டது, இந்த ஈஃபில் டவர்.

பிரசித்தி பெற்ற பிரமிடுகள்


செல்வச் செழிப்பிலே மிதந்து, பிறர் பார்த்து மெய்ச்சும்படியாய் வாழ்ந்தவர்கள், எகிப்தியர்கள். உயிருள்ளபோது மட்டுமா அவ்விதம் வாழ்ந்தார்கள்? இறந்த பின்னும் அவர்கள் செழிப்போடுதான் இருந்தார்கள்.
ஓர் எகிப்திய மன்னனோ சிற்றரசனோ பெருங்குடி மகனோ இறந்து போனால், அவனுடன் தங்கப்பாளங்கள், நவரத்தின மணிகள், விலைமதிப்பற்ற அணிகலன்கள், சப்ரகூட மஞ்சங்கள், அத்தர் புனுகு ஜவ்வாது போன்ற வாசனைத் திரவியங்கள் ஆகிய யாவற்றையும் அவர்களோடு வைத்துப் புதைத்துவிடுவார்கள்!. உயிரோடிருந்த போது அனுபவித்த சுகபோகங்களை இறந்த பின்னரும் அனுபவிப்பர் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்கள், எகிப்தியர்கள்.
அவர்கள் தம் கல்லறைகளைப் பெரிய அரண்மனை போன்று கட்டினார்கள். அவற்றைப் “பிரமிடுகள்” என்று பெயரிட்டு வழங்கினர் எகிப்தியர்கள். அவ்விதம் கட்டப்பட்ட பிரமிடுகள் எகிப்தில் ஆயிரக்கணக்கிலே இருந்தன. அவற்றுள் பல அழிந்தன. சில, அழிவுகளுக்குத் தப்பி, விண்முட்டும் அளவுக்குக் கம்பீரமாக நிற்பதை இன்றும் பார்க்கலாம்! அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு, அப்பிரமிடுகள் வேறுபட்ட அளவுகளில் விளங்குகின்றன.
எகிப்தில் இன்றுள்ள பிரமிடுகளுள் மிகப்பெரிதெனக் கருதப்படுவது கூஃபு என்னும் அரசனால் கட்டப்பட்ட பிரமிடுதான். அன்றும் சரி, இன்றும் சரி, அதனை மிஞ்சக்கூடிய பிரமிடு வேறு இல்லை என்று வரலாறு கூறுகிறது.
நாலாயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்தப்பிரமிடுவின் உயரம் 450 அடி ஆகும்! ஒவ்வொரு பக்கமும் 756 அடி அகலமும் கொண்டு நான்கு பக்கங்களும் முக்கோண வடிவிலே சிகரத்தை இணைத்துக்கொண்டுள்ளது. இதைக்கட்டுவதற்கு இருபத்து மூன்று லட்சம் அச்சுக்கற்களைத் தயாரித்தனர். அவை ஒவ்வொன்றும் இரண்டரை டன் எடையுள்ளவை. அந்தக்கற்களை இழுத்துக் கொண்டுவந்து சேர்ப்பதற்கு முரட்டு மிருகங்கள் பயன்படுத்தப்பட்டன. இதனைக் கட்டி முடிப்பதற்கு இருபது ஆண்டுகள் ஆயிற்று. இதனைக் கட்டி முடிப்பதற்கு வியர்வையும், இரத்தமும் சிந்திய அடிமைக்கூலிகள் இலட்சம் பேர்!கி.மு.2700-ல் வாழ்ந்த எகிப்தியரிடம் ஒரு நம்பிக்கை இருந்தது. தங்கள் அரசன் (பாரோ) சூரியதேவனின் பிள்ளை அவன் இறந்த பின்னர் அவனது சடலத்தை தக்கவிதத்தில் பாதுகாத்து வைக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் அவனால் நேரடியாகச் சொர்க்கத்திற்குச் சென்று வாழமுடியும். அவ்விதம் அவன் சொர்க்கத்திற்குச் செல்கின்ற போது, தங்க வைர நகைகளையும் கண்ணைப்பறிக்கும் வண்ண வண்ண ஆடையணிகளையும், நாற்காலி, மேசை, கட்டில் ஆகியவற்றையும் தன்னுடன் அம் மன்னன் எடுத்துச் செல்வான்.இவ்வாறு மக்கள் கருதியதால்தான், மன்னன் இறந்ததும் அவனைப் பாதுகாப்பாக வைப்பதற்கும், மேலே சொன்ன பொருற்களை வைப்பதற்கும், பிரம்மாண்டமான கல்லறையைக் கட்டினார்கள்.இந்தப் பிரமிடுகளிள் வைக்கப்படும் விலையுயர்ந்த ஆபரணங்களையும் தங்கப் பாளங்களையும் களவாடப் பல கொள்ளையர்கள் முயன்றனர். கட்டடக் கலைஞர்கள் சில உத்திகளைக் கையாண்டனர். அரசனின் கல்லறையை மூன்று நான்கு அடுக்குகளாகக் கட்டினர். கடைசி அடுக்கில் அரசனைக் கிடத்தினர். அவ்வாறு கட்டப்பட்ட கல்லறையைத் திறந்து, உள்ளே சென்று, கொள்ளையடிக்க எவரேனும் சென்றால் அவர் மீண்டும் உயிருடன் திர்ம்பி வர முடியாதபடி சுரங்கப்பாதை மூடிக்கொள்ளும். பிணமாய்க் கிடக்கும் அரசனுக்குத் துணையாக அவனும் பிணமாக வேண்டியதுதான்! அதனால், இன்றுவரை பிரமிடுகள் அழியாமலும், அவற்றினுள்ளே மண்டிக் கிடக்கும் செல்வங்கள் சூறையாடப்படாமலும் பாதுகாக்கப்பட்டுள்ளன.இன்றும் இப் பிரமிடுகள் சில, நைல்நதிக் கரையிலே, புராதனப் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டு கம்பீரமாய் நிற்கின்றன!

Monday, March 10, 2008

சூரியனின் தோற்றப் பயணமும் புவியின் சுழற்சியும் சுற்றுகையும்.


ஞாயிற்றுத் தொகுதி
சூரியனும் அதனைச் சுற்றிப் பயணம் செய்யும் ஏனைய கோள்களும் ஞாயிற்றுத் தொகுதி எனப்படும். ஞாயிற்றுத் தொகுதியில் அடங்கும் கோள்கள்.
1. புதன்
2. வெள்ளி
3. பூமி
4. செவ்வாய்
5. வியாழன்
6. சனி
7. யுரேனஸ்
8. நெப்ரியூன்
9. புளூட்டோ
தோற்ற அசைவு
பஸ் வண்டியில் பயணம் செய்யும்போது எதிரே நிற்கின்ற மின் கம்பங்கள் எம்மை நோக்கி ஓடிவருவது போல்இருக்கும். இது தோற்ற அசைவு எனப்படும்.
இவ்வாறே நாள்தோறும் சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைவதே தோற்ற அசைவு ஆகும். இங்கு புவி தனது சுயாதீனமான அச்சுப்பற்றி மேற்கிலிருந்து கிழக்காக சுழலுவதன் காரணமாக சூரியன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பயணம் செய்வது போல் தோன்றுன்கிறது. இதுவே சூரியனின் தோற்ற அசைவு எனப்படுகின்றது.
புவியின் சுழற்சி அச்சு:- புவியின் சுழற்சி நடைபெறுவதாகக் கருதப்படும்
கற்பனை அச்சு சுழற்சி அச்சு எனப்படும்.
புவியின் சுற்றுகை:- புவி சூரியனைச் சுற்றிவர 365 ¼ நாட்கள் எடுக்கும். இது புவிச்சற்றுகை எனப்படும்.
வட அரைக்கோளமும் தென் அரைக்கோளமும்
பூமி கற்பனை வட்டமொன்றினால் இரண்டு அரைக்கோளங்களாக பிரிக்கப்படும். இக்கற்பனை வட்ட மையத்தை நடுக்கோடு என்போம். பூமியின் மேல் அரைப்பாதியை வடஅரைக்கோளம் எனவும் கீழ் அரைப்பாதியை தென்னரைக்கோளம் எனவும் அழைப்பர். வட அரைக்கோளத்தின் முனைவு வடமுனைவு எனவும் தென் அரைக்கோளத்தின் முனைவு தென்முனைவு எனவும் அழைக்கப்படும்.
புவி தனது அச்சுப்பற்றி சுழன்றவாறு சூரியனைச் சுற்றி வரும் நீள்வட்ட ஒழுக்கு ஒரு தளத்தில் அமைந்திருக்கும். இத்தளம் பூமியின் மண்டலத்தலம் என்றும் கிரகண வளையம் என்றும் அழைக்கப்படும்.

Friday, February 29, 2008


இரும்பினால் ஆன கப்பல் நீரில் மிதப்பது எப்படி ?

இரும்பினாலான கப்பல் நீரில் மிதப்பதற்கான காரணம் யாதெனில், கப்பலின் நிறையை உடைய சமமான நீர் அளவை கப்பலின் அடிப்பகுதி இடம்பெயர்ப்பதால் ஆகும். இது மேல் நோக்கி ஒரு உந்து விசையை உண்டாக்குகிறது. இந்த அழுத்தமானது கப்பலின் அடிப்பாகத்தை மேல் நோக்கி மேலுதைப்பு செய்வதால் கப்பலால் மிதக்கக்கூடியதாய் இருக்கின்றது.

-------------------------------------------------------------------

டைனோசர் இனங்கள் அழிந்து போக காரணம்.


பெரும் விஞ்ஞான விளக்கங்களில் ஒரு விளக்கம் சொல்வது யாதெனில், பாரிய எரிநட்சத்திரம் ஒன்று பூமியின் மேற்பரப்புடன்மோதி, பல்லாயிரக்கணக்கான பில்லியன் தொன் எடையுள்ள தூசு துகள்களையும் சிதைவுகளையும் வாயுமண்ட லத்தில் வீசி எறிந்தது. இந்த மோதலின் விளைவாக பாரிய தீ உருவாகியது. இந்த தீயினால் உருவான பாரிய புகை மேகங்களும் சிதைவுகளும் சூரிய ஒளி பல மாதங்களுக்கு பூமியின் மேற்பரப்பை தொட முடியாதவாறு தடையாய் இருந்தன. எனவே மிக விரைவில் தாவரங்களின் பற்றாக்குறையும் பூமியின் காலநிலை மாற்றங்களில் ஏற்பட்ட வீழ்ச்சியும் டைனோசர்கள் அழிந்து போவதற்கு காரணமாய் இருந்தன.
---------------------------------------------------------------
எக்ஸ்-ரே கதிர்ப்படத்தை கண்டு பிடித்தவர்.

1895 ம் ஆண்டு வில்லியம் ரொயிங்டன் என்ற ஜேர்மன் பௌதீக சாஸ்திர வல்லுனர், ஒரு எதிர்மின்வாய் வெப்பக்கதிர் பரிசோதனையின் போது ஒரு புதிய கதிர் ஒன்றை கண்டுபிடித்தார். இது அறியப்படாத ஒரு கதிர் என்பதால் இதற்கு “X” எனப் பெயரிட்டார். இந்த கதிரின் மூலம் இவர் தனது மனைவியின் கையை கதிர்ப்படம் (எக்ஸ்-ரே) எடுத்தார். இதுவே முதன் முதலில் எடுக்கப்பட்ட கதிர்ப்படமாக பதிவாகியது.
--------------------------------------------------------
பார்வையற்றோருக்கான அச்சிடல் மற்றும் எழுதும் முறையான பிரெய்ல் முறையை கண்டு பிடித்தவர்.

லுயிஸ் பிரெய்ல் (1809-1852) என்ற 15 வயதான விழிப்புலனற்ற மாணவனே பார்வையற்றோர்க்கான அச்சிடல் மற்றும் எழுதும் முறையை கண்டுபிடித்தார். இப் பிரெய்ல் முறையானது உயர்ந்து நிற்கும் புள்ளிகளால் ஆனது. எனவே ஒருவர் தனது விரல் நுனியை இப்புள்ளிகளுக்கு மேல் கொண்டு செல்வதன் மூலம் எழுத்துக்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும். 1829ம் ஆண்டு லூயிஸ் பிரெய்ல் இந்த புள்ளி முறையை வெளியிட்டார்.
-----------------------------------------------------------
உலகளாவிய வெப்தளத்தை (WWW) கண்டுபிடித்தவர்.

டிம் பர்னர்ஸ் லீ என்ற இங்கிலாந்து கணணித்துறை விஞ்ஞானியே 1990ம் ஆண்டு உலகளாவிய வெப்தளத்தை உருவாக்கினார். இந்த WWW என்பது யாதெனில், கணணி கோப்புகள் அனைத்தும் இணையத்தளத்துடன் இணைக்கப்பட்டு பலதரப்பட்ட தகவல்களுக்கான ஒரு மூலஸ்தானத்தை உருவாக்குகின்றது. இது எழுத்துருக்களை மட்டுமல்லாது விளக்கப் படங்கள், ஒலிகள் மற்றும் அசையும் படங்களை கொண்டுள்ளது. வெப்தளத்தின் அறிமுகம் இணையத்தளத்தை பிரபல்யப்படுத்தியதுடன் கையாள்வதற்கும் இலகுவானதாக மாறியது.
---------------------------------------------------------

குமிழ் முனைப் பேனாவை கண்டு பிடித்தவர்.

லாடிஸ்லோ (லாடிஸோ) பிறோ என்ற ஹங்கேரி நாட்டு ஊடகவியலாளர் 1938 ம் ஆண்டு முதலாவது வணிக ரீதியான குமிழ்முனை பேனாவை கண்டுபிடித்தார். இந்த பேனா விரைவாக காய்ந்து விடக்கூடிய மையை கொண்டுள்ளதுடன் அதன் முனையில் பேப்பர்களின் மேல் அசையக்கூடிய மிகச்சிறிய உருண்டை ஒன்ரும் உள்ளது.
------------------------------------------------------------

ப்ரோட்டீன்கள் என்றால் என்ன? எமது உடலுக்கு இவை முக்கியமாய் இருப்பது ஏன்?

ப்ரோட்டீன்கள் (புரதம்) என்பது, எமது உடலுக்கு சக்தியை தரும் பிரதான மூன்று வகை உணவுகளில் ஒன்றாகும். மனித உடலில் பல மில்லியன் கலங்கள் (செல்ஸ்) உள்ளன. ப்ரோட்டீன் ஒவ்வொரு கலங்களின் வளர்ச்சியிலும் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றது. இவை தசை மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் உடலில் திசுக்களை குணப்படுத்துவதற்கும் அத்தியாவசியமானதாய் இருக்கின்றது. சில ப்ரோட்டீன்கள் விசேட தொழிற்பாடுகளை கொண்டுள்ளன. உதாரணமாக, இரத்தமானது நுரையீரலில் இருந்து ஒட்சிசனை உடலின் திசுக்களுக்கு கொண்டு செல்லும் ப்ரோட்டீனை கொண்டுள்ளதுடன் நோய்களிலிருந்து பாதுகாப்பை வழங்கும் ப்ரோட்டீன்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ப்ரோட்டீன் தமது உணவுகளில் இருந்து கிடைக்கின்றது. அதிக ப்ரோட்டீனை கொண்ட உணவுகளாக பால், சீஸ், மீன், இறைச்சி போன்றவற்றை குறிப்பிடலாம்.
------------------------------------------------------------

பிரதான இரத்த பிரிவுகள் நான்கு.


A, B, AB, O இவையே பிரதான நான்கு இரத்த பிரிவுகளாகும். சிவப்பு இரத்த உயிரணு படலமானது அன்டிஜன்ஸ் என அழைக்கப்படும். ப்ரோட்டீனை கொண்டுள்ளது. இந்த அன்டிஜன்கள் இருப்பதையும் இல்லாததையும் பொருத்தே மனித உடலில் இரத்தப் பிரிவுகள் வகைப்படுத்தப்படுகின்றன. என விஞ்ஞானிகள் வரையறுத்துள்ளனர்.
--------------------------------------------------------
மனித உடலில் உள்ள எலும்புகள்.

சாதாரணமாக மனிதனது எலும்புக்கூடு 206 எலும்புகளை கொண்டிருக்கும். ஒரு குழந்தை பிறக்கும் போது 270 மெல்லிய எலும்புகளை கொண்டிருக்கும். எனினும் குழந்தைகள் வளரும் போது இவற்றில் சில எலும்புகள் ஒன்றாக இணைகின்றன. இந்த எலும்புக்கூடானது உடலுக்கு மிகவும் உறுதியான ஒரு கட்டமைப்பை வழங்குவதுடன் உள்ளக உடல் உறுப்புக்களையும் பாதுகாக்கின்றது. உதாரணமாக மூளை மண்டை ஓடு மூலம் பாதுகாக்கப்படுகின்றது. தண்டுவடம் முதுகுத்தண்டினால் பாதுகாக்கப்படுகின்றது. இது தவிர இதயமும் நுரையீரலும் விலா எலும்புகளால் பாதுகாக்கப்படுகின்றன.
--------------------------------------------------------

பால் வீதி என்றால்

பால்வீதி என்பது சூரியன், பூமி, கோள்கள் மற்றும் ஏனைய வஸ்துக்களையும் எமது சூரிய மண்டலத்தில் உள்ளடக்கிய ஒரு மண்டலமாகும். இது மிகப் பெரியதாய் இருப்பதுடன் சூரியனுடன் பல பில்லியன் கணக்கான நட்சத்திரங்களையும் உள்ளடக்கியதாய் இருக்கின்றது. வாயு மற்றும் தூசு துகள்களை கொண்ட பாரிய மேகங்கள் பால் மண்டலத்தில் சுற்றி வருவதுடன் அடிக்கடி புதிய நட்சத்திரங்களையும் உருவாக்குகின்றன.
-----------------------------------------------
சூரிய மண்டலத்திலுள்ள மிகப்பெரிய கோள்.

ஜூபிடர். மிகப்பெரிய கோளான இது, எமது சூரிய மண்டலத்தில் சூரியனில் இருந்து ஐந்தாவதாக உள்ள கோளாகும். இது 285,600 கி.மீ சுற்றளவினை உடையது. அதாவதுஇதன் சுற்றளவு பூமியின் சுற்றளவை விட 22 மடங்கு பெரியதாகும். ஜுபிடரானது சிறிதும் திடமற்ற மேற்பரப்பை கொண்ட, வாயு மற்றும் திரவத்தால் ஆன ஒரு இராட்சத உருண்டையாகும். இக் கோளின் மேற்பரப்பு தடித்த சிவப்பு, பழுப்பு, மஞ்ஞள் மற்றும் வெள்ளை நிற மேகங்களால் ஆனது.
---------------------------------------------------
மிகவும் உயரமாக பறக்கும் பறவை.

“பார் ஹெடட் கூஸ்” எனப்படும் வாத்து இனமே உலகில் மிகவும் உயரத்தில் பறக்கக்கூடிய பறவையாக கருதப்படுகின்றது. இவை மிகவும் உயர்ந்த மலைத்தொடரான ஆசியாவின் இமயமலைத் தொடர்களுக்கு மேலாக சுமார் 25,000 அடி (7,625 மீற்றர்கள்) உயரத்தில் பறக்கக்கூடியவை.
-------------------------------------------------------
உலகின் மிகவும் சிறிய தீவில் உள்ள நாடு.

மிகச்சிறிய சுதந்திர தீவான நாடு யாதெனில் பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள நவ்ருவாகும். இது 8 சதுர மைல்களை மாத்திரம் கொண்ட ஒரு தனித் தீவாகும். தலைநகரம் அற்ற இத்தீவின் மக்கள் தொகை 13,000 ஆகும்.

----------------------------------------------------

உலகின் மிக நீண்ட மலைத்தொடர்.

தெற்கு அமெரிக்காவில் உள்ள அன்தீஸ் மலைத்தொடரே கடல் மட்டத்திற்கு உயர்வாக உள்ள மலைத்தொடர்களில் மிக நீண்ட மலைத்தொடராகும். இது முழு தென் அமெரிக்காவின் மேற்கு கரையோரத்திலிருந்து கேப் ஹொர்ன், பனாமா மற்றும் வெனிசுலா என சுமார் 4,500 மைல் தூரத்திற்கு பரந்துள்ளது.
--------------------------------------------------
உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டம்.

அதிக தீவுகளை கொண்ட ஒரு தீவுத்தொடரே தீவக்கூட்டம் எனப்படுகிறது. உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டம் தென்கிழக்காசியாவில் அமைந்துள்ள இந்தோனேஷியாவாகும். இது 18,000 இற்கும் அதிகமான தீவுகளை கொண்டது. இந்தோனேஷியாவின் தீவுகள் பூத்தியரேகையூடாக இந்து சமுத்திரத்தில் 5000 கி.மீற்றருக்கும் அதிகமாக பரந்துள்ளன.
-----------------------------------------------------------------
தற்போது வாழும் மிகப்பெரிய மீன்.

திமிங்கில சுறா எனப்படும் மீனே தற்போது வாழும் மிகப்பெரிய மீனினமாகும். இவை கிட்டத்தட்ட 40 அடி நீளத்தையும் (12 மீற்றர்) 14 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நிறையையும் கொண்டதாய் இருக்கும். அதாவது இது இரண்டு யானைகளின் சராசரி நிறையை கொண்டதாய் உள்ளது. இது கால்பந்து அளவிலான முட்டைகளை இடுகின்றது. இவை மிதக்கும் சிறிய உயிரினங்களை உணவாக உட்கொள்கின்றது. இதன் உருவம் மிகப்பெரியதாய் இருப்பினும் இது மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.