Friday, February 29, 2008


இரும்பினால் ஆன கப்பல் நீரில் மிதப்பது எப்படி ?

இரும்பினாலான கப்பல் நீரில் மிதப்பதற்கான காரணம் யாதெனில், கப்பலின் நிறையை உடைய சமமான நீர் அளவை கப்பலின் அடிப்பகுதி இடம்பெயர்ப்பதால் ஆகும். இது மேல் நோக்கி ஒரு உந்து விசையை உண்டாக்குகிறது. இந்த அழுத்தமானது கப்பலின் அடிப்பாகத்தை மேல் நோக்கி மேலுதைப்பு செய்வதால் கப்பலால் மிதக்கக்கூடியதாய் இருக்கின்றது.

-------------------------------------------------------------------

டைனோசர் இனங்கள் அழிந்து போக காரணம்.


பெரும் விஞ்ஞான விளக்கங்களில் ஒரு விளக்கம் சொல்வது யாதெனில், பாரிய எரிநட்சத்திரம் ஒன்று பூமியின் மேற்பரப்புடன்மோதி, பல்லாயிரக்கணக்கான பில்லியன் தொன் எடையுள்ள தூசு துகள்களையும் சிதைவுகளையும் வாயுமண்ட லத்தில் வீசி எறிந்தது. இந்த மோதலின் விளைவாக பாரிய தீ உருவாகியது. இந்த தீயினால் உருவான பாரிய புகை மேகங்களும் சிதைவுகளும் சூரிய ஒளி பல மாதங்களுக்கு பூமியின் மேற்பரப்பை தொட முடியாதவாறு தடையாய் இருந்தன. எனவே மிக விரைவில் தாவரங்களின் பற்றாக்குறையும் பூமியின் காலநிலை மாற்றங்களில் ஏற்பட்ட வீழ்ச்சியும் டைனோசர்கள் அழிந்து போவதற்கு காரணமாய் இருந்தன.
---------------------------------------------------------------
எக்ஸ்-ரே கதிர்ப்படத்தை கண்டு பிடித்தவர்.

1895 ம் ஆண்டு வில்லியம் ரொயிங்டன் என்ற ஜேர்மன் பௌதீக சாஸ்திர வல்லுனர், ஒரு எதிர்மின்வாய் வெப்பக்கதிர் பரிசோதனையின் போது ஒரு புதிய கதிர் ஒன்றை கண்டுபிடித்தார். இது அறியப்படாத ஒரு கதிர் என்பதால் இதற்கு “X” எனப் பெயரிட்டார். இந்த கதிரின் மூலம் இவர் தனது மனைவியின் கையை கதிர்ப்படம் (எக்ஸ்-ரே) எடுத்தார். இதுவே முதன் முதலில் எடுக்கப்பட்ட கதிர்ப்படமாக பதிவாகியது.
--------------------------------------------------------
பார்வையற்றோருக்கான அச்சிடல் மற்றும் எழுதும் முறையான பிரெய்ல் முறையை கண்டு பிடித்தவர்.

லுயிஸ் பிரெய்ல் (1809-1852) என்ற 15 வயதான விழிப்புலனற்ற மாணவனே பார்வையற்றோர்க்கான அச்சிடல் மற்றும் எழுதும் முறையை கண்டுபிடித்தார். இப் பிரெய்ல் முறையானது உயர்ந்து நிற்கும் புள்ளிகளால் ஆனது. எனவே ஒருவர் தனது விரல் நுனியை இப்புள்ளிகளுக்கு மேல் கொண்டு செல்வதன் மூலம் எழுத்துக்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும். 1829ம் ஆண்டு லூயிஸ் பிரெய்ல் இந்த புள்ளி முறையை வெளியிட்டார்.
-----------------------------------------------------------
உலகளாவிய வெப்தளத்தை (WWW) கண்டுபிடித்தவர்.

டிம் பர்னர்ஸ் லீ என்ற இங்கிலாந்து கணணித்துறை விஞ்ஞானியே 1990ம் ஆண்டு உலகளாவிய வெப்தளத்தை உருவாக்கினார். இந்த WWW என்பது யாதெனில், கணணி கோப்புகள் அனைத்தும் இணையத்தளத்துடன் இணைக்கப்பட்டு பலதரப்பட்ட தகவல்களுக்கான ஒரு மூலஸ்தானத்தை உருவாக்குகின்றது. இது எழுத்துருக்களை மட்டுமல்லாது விளக்கப் படங்கள், ஒலிகள் மற்றும் அசையும் படங்களை கொண்டுள்ளது. வெப்தளத்தின் அறிமுகம் இணையத்தளத்தை பிரபல்யப்படுத்தியதுடன் கையாள்வதற்கும் இலகுவானதாக மாறியது.
---------------------------------------------------------

குமிழ் முனைப் பேனாவை கண்டு பிடித்தவர்.

லாடிஸ்லோ (லாடிஸோ) பிறோ என்ற ஹங்கேரி நாட்டு ஊடகவியலாளர் 1938 ம் ஆண்டு முதலாவது வணிக ரீதியான குமிழ்முனை பேனாவை கண்டுபிடித்தார். இந்த பேனா விரைவாக காய்ந்து விடக்கூடிய மையை கொண்டுள்ளதுடன் அதன் முனையில் பேப்பர்களின் மேல் அசையக்கூடிய மிகச்சிறிய உருண்டை ஒன்ரும் உள்ளது.
------------------------------------------------------------

ப்ரோட்டீன்கள் என்றால் என்ன? எமது உடலுக்கு இவை முக்கியமாய் இருப்பது ஏன்?

ப்ரோட்டீன்கள் (புரதம்) என்பது, எமது உடலுக்கு சக்தியை தரும் பிரதான மூன்று வகை உணவுகளில் ஒன்றாகும். மனித உடலில் பல மில்லியன் கலங்கள் (செல்ஸ்) உள்ளன. ப்ரோட்டீன் ஒவ்வொரு கலங்களின் வளர்ச்சியிலும் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றது. இவை தசை மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் உடலில் திசுக்களை குணப்படுத்துவதற்கும் அத்தியாவசியமானதாய் இருக்கின்றது. சில ப்ரோட்டீன்கள் விசேட தொழிற்பாடுகளை கொண்டுள்ளன. உதாரணமாக, இரத்தமானது நுரையீரலில் இருந்து ஒட்சிசனை உடலின் திசுக்களுக்கு கொண்டு செல்லும் ப்ரோட்டீனை கொண்டுள்ளதுடன் நோய்களிலிருந்து பாதுகாப்பை வழங்கும் ப்ரோட்டீன்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ப்ரோட்டீன் தமது உணவுகளில் இருந்து கிடைக்கின்றது. அதிக ப்ரோட்டீனை கொண்ட உணவுகளாக பால், சீஸ், மீன், இறைச்சி போன்றவற்றை குறிப்பிடலாம்.
------------------------------------------------------------

பிரதான இரத்த பிரிவுகள் நான்கு.


A, B, AB, O இவையே பிரதான நான்கு இரத்த பிரிவுகளாகும். சிவப்பு இரத்த உயிரணு படலமானது அன்டிஜன்ஸ் என அழைக்கப்படும். ப்ரோட்டீனை கொண்டுள்ளது. இந்த அன்டிஜன்கள் இருப்பதையும் இல்லாததையும் பொருத்தே மனித உடலில் இரத்தப் பிரிவுகள் வகைப்படுத்தப்படுகின்றன. என விஞ்ஞானிகள் வரையறுத்துள்ளனர்.
--------------------------------------------------------
மனித உடலில் உள்ள எலும்புகள்.

சாதாரணமாக மனிதனது எலும்புக்கூடு 206 எலும்புகளை கொண்டிருக்கும். ஒரு குழந்தை பிறக்கும் போது 270 மெல்லிய எலும்புகளை கொண்டிருக்கும். எனினும் குழந்தைகள் வளரும் போது இவற்றில் சில எலும்புகள் ஒன்றாக இணைகின்றன. இந்த எலும்புக்கூடானது உடலுக்கு மிகவும் உறுதியான ஒரு கட்டமைப்பை வழங்குவதுடன் உள்ளக உடல் உறுப்புக்களையும் பாதுகாக்கின்றது. உதாரணமாக மூளை மண்டை ஓடு மூலம் பாதுகாக்கப்படுகின்றது. தண்டுவடம் முதுகுத்தண்டினால் பாதுகாக்கப்படுகின்றது. இது தவிர இதயமும் நுரையீரலும் விலா எலும்புகளால் பாதுகாக்கப்படுகின்றன.
--------------------------------------------------------

பால் வீதி என்றால்

பால்வீதி என்பது சூரியன், பூமி, கோள்கள் மற்றும் ஏனைய வஸ்துக்களையும் எமது சூரிய மண்டலத்தில் உள்ளடக்கிய ஒரு மண்டலமாகும். இது மிகப் பெரியதாய் இருப்பதுடன் சூரியனுடன் பல பில்லியன் கணக்கான நட்சத்திரங்களையும் உள்ளடக்கியதாய் இருக்கின்றது. வாயு மற்றும் தூசு துகள்களை கொண்ட பாரிய மேகங்கள் பால் மண்டலத்தில் சுற்றி வருவதுடன் அடிக்கடி புதிய நட்சத்திரங்களையும் உருவாக்குகின்றன.
-----------------------------------------------
சூரிய மண்டலத்திலுள்ள மிகப்பெரிய கோள்.

ஜூபிடர். மிகப்பெரிய கோளான இது, எமது சூரிய மண்டலத்தில் சூரியனில் இருந்து ஐந்தாவதாக உள்ள கோளாகும். இது 285,600 கி.மீ சுற்றளவினை உடையது. அதாவதுஇதன் சுற்றளவு பூமியின் சுற்றளவை விட 22 மடங்கு பெரியதாகும். ஜுபிடரானது சிறிதும் திடமற்ற மேற்பரப்பை கொண்ட, வாயு மற்றும் திரவத்தால் ஆன ஒரு இராட்சத உருண்டையாகும். இக் கோளின் மேற்பரப்பு தடித்த சிவப்பு, பழுப்பு, மஞ்ஞள் மற்றும் வெள்ளை நிற மேகங்களால் ஆனது.
---------------------------------------------------
மிகவும் உயரமாக பறக்கும் பறவை.

“பார் ஹெடட் கூஸ்” எனப்படும் வாத்து இனமே உலகில் மிகவும் உயரத்தில் பறக்கக்கூடிய பறவையாக கருதப்படுகின்றது. இவை மிகவும் உயர்ந்த மலைத்தொடரான ஆசியாவின் இமயமலைத் தொடர்களுக்கு மேலாக சுமார் 25,000 அடி (7,625 மீற்றர்கள்) உயரத்தில் பறக்கக்கூடியவை.
-------------------------------------------------------
உலகின் மிகவும் சிறிய தீவில் உள்ள நாடு.

மிகச்சிறிய சுதந்திர தீவான நாடு யாதெனில் பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள நவ்ருவாகும். இது 8 சதுர மைல்களை மாத்திரம் கொண்ட ஒரு தனித் தீவாகும். தலைநகரம் அற்ற இத்தீவின் மக்கள் தொகை 13,000 ஆகும்.

----------------------------------------------------

உலகின் மிக நீண்ட மலைத்தொடர்.

தெற்கு அமெரிக்காவில் உள்ள அன்தீஸ் மலைத்தொடரே கடல் மட்டத்திற்கு உயர்வாக உள்ள மலைத்தொடர்களில் மிக நீண்ட மலைத்தொடராகும். இது முழு தென் அமெரிக்காவின் மேற்கு கரையோரத்திலிருந்து கேப் ஹொர்ன், பனாமா மற்றும் வெனிசுலா என சுமார் 4,500 மைல் தூரத்திற்கு பரந்துள்ளது.
--------------------------------------------------
உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டம்.

அதிக தீவுகளை கொண்ட ஒரு தீவுத்தொடரே தீவக்கூட்டம் எனப்படுகிறது. உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டம் தென்கிழக்காசியாவில் அமைந்துள்ள இந்தோனேஷியாவாகும். இது 18,000 இற்கும் அதிகமான தீவுகளை கொண்டது. இந்தோனேஷியாவின் தீவுகள் பூத்தியரேகையூடாக இந்து சமுத்திரத்தில் 5000 கி.மீற்றருக்கும் அதிகமாக பரந்துள்ளன.
-----------------------------------------------------------------
தற்போது வாழும் மிகப்பெரிய மீன்.

திமிங்கில சுறா எனப்படும் மீனே தற்போது வாழும் மிகப்பெரிய மீனினமாகும். இவை கிட்டத்தட்ட 40 அடி நீளத்தையும் (12 மீற்றர்) 14 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நிறையையும் கொண்டதாய் இருக்கும். அதாவது இது இரண்டு யானைகளின் சராசரி நிறையை கொண்டதாய் உள்ளது. இது கால்பந்து அளவிலான முட்டைகளை இடுகின்றது. இவை மிதக்கும் சிறிய உயிரினங்களை உணவாக உட்கொள்கின்றது. இதன் உருவம் மிகப்பெரியதாய் இருப்பினும் இது மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.